-
Thursday, January 21, 2010
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய், நாம்தான் கிடைத்தோமா?
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
Sunday, January 17, 2010
தகுதியற்றதா, தேவையற்றதா?
தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் அண்ணா கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது போன்ற தகுதியற்ற செலவுகளுக்காகத் திருப்பிவிட்டதாகக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறியிருக்கிறது.
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
Subscribe to:
Posts (Atom)